மதுரை மாநகர் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறார்களின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்த, மதுரை மாநகர்¸ ஆரப்பாளையத்தை சேர்ந்த குமார் மற்றும் சொக்கலிங்கம் @ செந்தில்குமார் ஆகிய இருவர் மீது நேற்று (26.02.2020) Information & Technology Act மற்றும் POCSO Act – ன் படி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாரமணி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து இரண்டு கைபேசிகளை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தார்கள். இதற்கிடையே சிறுவர்களின் ஆபாச படங்கள் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ததாக பகிர்ந்த தாக ஒத்தக்கடை சேர்ந்த ஐயப்பன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் மதுரையில் மாவட்டத்தில் மட்டும் மூன்று பேர் ஆபாசப் படம் பதிவிறக்கம் செய்து பகிர்ந்த கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.