மதுரை சண்முக நகரைச் சேர்ந்த சண்முக நாடார் என்பவரின் மகன் வெற்றிவேல் என்பவர் வீட்டில் இருந்தபோது இரண்டு நபர்கள் அவரது வீட்டின் கதவை தட்டி கொரியர் வந்துள்ளதாக சொல்லி அழைத்ததால் அவரது மருமகள் வீட்டின் கதவை திறந்தபோது இரண்டு நபர்களில் ஒருவர் மட்டும் தலைக்கவசம் அணிந்து இருந்ததாகவும் மருமகளின் வாயை மூடி கீழே தள்ளி விட்டு அறைக்குள் வைத்து அவர்கள் மீது மிளகாய்பொடியை தூவி மிரட்டி வெற்றிவேல் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கசங்கிலியையும், அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த 22 பவுன் தாலி கொடியையும், அவரது மருமகள் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் தாலி கொடியையும் பறித்துக்கொண்டதாகவும், மற்றொரு நபர் அவரது மாடிக்கு சென்று பேக்கில் அவர் வைத்திருந்த பணம் ரூ.32,00,000/- யும் இருவரும் சேர்ந்து கொள்ளையடித்து சென்றுவிட்டதாக தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஸ்ரீதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த போது வீரகுமார் நிர்மல் குமார் தினேஷ்குமார் கைது செய்து அவர்களிடம் இருந்து தங்கநகை 369.500 கிராம் மற்றும் பணம் ரூ.30,00,000/- ம் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்
.செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.