8
பூம்புகாரில் ஒரே நாளில் 40 காக்கைகள் மற்றும் 3 நாய்கள் பலி : பொதுமக்கள் அச்சம்!
கொரோனா தொற்று மனிதர்களிடம் பரவி வரும் நிலையில் பூம்புகாரில் ஒரே நாளில் காக்கைகள், நாய்கள் இறந்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகாரில் 40 காக்கைகள் மற்றும் 3 நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. தகவல் அறிந்த சுகாதார, கால்நடை துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த காக்கைகள் மற்றும் நாய்களுக்கு பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னர் தான் எப்படி இவைகள் இறந்தன? என்ற விவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று மனிதர்களிடம் பரவி வரும் நிலையில் ஒரே நாளில் காக்கைகள், நாய்கள் இறந்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.