கீழக்கரைக்கும் அரபுலத்திற்கும் நீண்ட நெடிய பாரம்பரிய தொடர்பு உண்டு. கீழக்கரையின் இன்றைய வளர்ச்சிக்கு அரபுல வேலை வாய்ப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்று வரை அரபுலகில் கீழக்கரையைச் சார்ந்தவர்கள் பெரும் தொழிலதிபர்களாகவும், சர்வதேச நிறுவனங்களில் பெரும் பதவியும் வகித்து வருகிறார்கள. அதனுடைய தாக்கம் கீழக்கரையில் இன்று பல் வேறு அரபு நாட்டு சுவையுடைய உணவகங்கள் வருகை தந்த வண்ணம் உள்ளன.
கீழக்கரையில் இன்று (04/02/2019) திறந்திருக்கும் உணவகம் மசாவி சவர்மா ஆகும். இந்த உணவகம் அரேபிய உணவு வகைகளை வழங்குவதுடன் புதிய உணவு முறையான பேலியோ டயட் எனப்படும் உணவு வகைகளிலும் கவனம் செலுத்தியுள்ளர்கள் என்பது கூடுதல் தகவலாகும். இவ்வுணவகம் கீழக்கரை செக்கடி பகுதிக்கு எதிரே உள்ள களஞ்சியம் வாகன நிறுத்தப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அரபு வகை உணவில் இறால், மீன், கோழி, இறைச்சி, மாட்டிறைச்சி என பல் வேறு உணவு வகைகளை வித்தியாசமான சுவையில் வழங்க உள்ளார்கள்.
இந்த உணவகம் சம்பந்தமான மேல் விபரங்களுக்கு 96000 75552 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
You must be logged in to post a comment.