Home செய்திகள் கரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதி ரூ.25 லட்சம் எம். எல். ஏ பவுன்ராஜ் வழங்கினார் 

தரங்கம்பாடி, ஏப்.3:நாகை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட  பகுதியில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் பூம்புகார் சட்ட பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினார்.பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்  கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும்  தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.இதற்கான பரிந்துரைக் கடிதத்தை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜனிடம் வழங்கினார். ஒன்றிய ஆணையர் அருண் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை,

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!