Home செய்திகள்கீழக்கரை செய்திகள் “வீட்டில் இருந்தால் பரிசு” நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் போது தேவையில்லாம் மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த மதுரை தெப்பக்குளம் காவல்துறை புது முயற்சி..

“வீட்டில் இருந்தால் பரிசு” நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் போது தேவையில்லாம் மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த மதுரை தெப்பக்குளம் காவல்துறை புது முயற்சி..

by ஆசிரியர்

கொரானா எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி அலட்சியமாக பொது மக்கள் சாலைகளில் சுற்றுவதை கட்டுப்படுத்த மதுரை காவல்துறை ஆணையர் டேவிட் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் தெப்பக்குளம் சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஒரு புதுவித முயற்சி மேற்கொண்டுள்ளார்.

IMG_0441

அவர் ஒரு காரில் ஒலிபெருக்கி மூலம் அனுப்பானடி, காமராஜர் சாலை, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கொரானா விழிப்புணர்வு பற்றி எடுத்து கூறியதுடன் கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குடும்பத்துடன் வீட்டில் இருந்து ஓவியம், கவிதை, குறும்படம் எடுத்து எங்களது வாட்ஸ் – அப் நம்பருக்கு அனுப்பினாள் தேர்வு செய்து வீட்டிற்கே வந்து பரிசு தருகிறோம் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!