Home செய்திகள் மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரியத்தால் வீணாகும் பல லட்சம்..

மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரியத்தால் வீணாகும் பல லட்சம்..

by ஆசிரியர்

மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரியம் மூலமாக ஏறக்குறைய சுமார் 21 ஆண்டுகளாக விற்பனையாகமல் வீணாகியுள்ளது. இக்கட்டிடமானது சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இக்கட்டிடமானது எவவித பராமரிப்பு மற்றும் சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் உள்ளது. இதனால் ஜன்னல், கதவுகள் அதிகமாய் களவு போய் உள்ளன. இரவு நேரங்களில் அல்லாமல் பகல் நேரங்களிலும் களவுகள் அதிகமாக நடக்கிறது. சிறுவர்கள் இக்கட்டிடத்தை தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் இக்கட்டிட வளாகத்தில் ஆடு,மாடுகள் கட்டவும், அதனை கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர்.

போலிசாரின் ரோந்தும் இங்கு பெயரளவில் தான் நடக்கிறது. எனவே இரவு நேரறங்களில் பொதுமக்கள் மற்றும் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வோர் இவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

ஆகவே இக்கட்டிடத்தை ஆய்வு செய்து சம்பந்தபட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா என பார்ப்போம் என பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!