7
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது என்றும் இல்லாத அளவுக்கு இன்று (19/06/2020) முதன் முறையாக அதிகபட்சமாக 98 என்ற எண்ணை தொட்டுள்ளது. பொதுமக்கள் இடையே பெரும அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை தினசரி 5 அல்லது 20 அதிகபட்சம் பாதிப்பானது இருந்து வந்த நிலையில் இன்று 98 என்பது மதுரை மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்ல வேண்டும். இதுவரை 498 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 350பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளறர்.
மேலும் பாதிப்பு அதிகம் உண்டாகாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. சென்னை மாநகர் போன்ற நிலை மதுரைக்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.