Home செய்திகள் கூட்டுப் பண்ணைகள் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ 25 இலட்சத்தில் வேளாண் கருவிகளை சீர்காழி எம்.எல்.ஏ. வழங்கினார்

கூட்டுப் பண்ணைகள் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ 25 இலட்சத்தில் வேளாண் கருவிகளை சீர்காழி எம்.எல்.ஏ. வழங்கினார்

by mohan

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வேளாண் துறை அலுவலகத்தில் கூட்டுப் பண்ணைகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை சீர்காழி சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் பி.வி.பாரதி வழங்கினார்..சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டவிளந்திடசமுத்திரம், நிம்மேலி, திருவாலி, கீழசட்டநாதபுரம் ஆகிய உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா 5 லட்சம் வீதம் 4 குழுக்களுக்கும் 20 லட்சம் மானியத்தில் டிராக்டர்கள் மற்றும் 50 சதவீத மானியத்தில் ஆயில் இன்ஜின்களும், நுண்ணீர் பாசன திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகளும், தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி வட்டார வேளாண்மைதுறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!