Home செய்திகள்கீழக்கரை செய்திகள் லோக்சபா தேர்தல் ராமநாதபுரம் தொகுதியில் ராகுல் காந்தி போட்டி: மீனவர் காங். தீர்மானம்..

லோக்சபா தேர்தல் ராமநாதபுரம் தொகுதியில் ராகுல் காந்தி போட்டி: மீனவர் காங். தீர்மானம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஜன.24 – வரும் லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ராகுல் காந்தி எம்பி போட்டியிட வேண்டும் என மீனவர் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது ராமநாதபுரம் மாவட்ட மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அகில இந்திய மீனவ காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை வைத்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், மகளிர் அணி தலைவி ராமேஸ்வரி பேசினர். இதில் விரைவில் நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் போட்டியிட ராமநாதபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் ராகுல் காந்தி எம்பி போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவரை விரைவில் நியமிக்க மாநில, தேசிய தலைமை முன்வர வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர்.

ராமநாதபுரம்  மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் இப்ராஹீம், வட்டார தலைவர்கள் சேது பாண்டியன் (திருப்புல்லாணி), காருகுடி சேகர்  (ராமநாதபுரம்), ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, இந்திய மீனவர் காங்கிரஸ் துணை தலைவர் ரோவன் தல்மேதா, மீனவர் காங்.மாவட்ட தலைவர் சகாயராஜ், உள்பட பல பங்கேற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com