11
மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே கரும்பாலை இந்திரா நகர் PT காலனி தெருவில் குடிபோதையில் சில ரவுடிகள் பொது மக்களை ஆபாச வார்த்தைகளால் மிரட்டி இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய காட்சி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த பகுதியில் இது போன்று அடிக்கடி ரவுடிகள் தொல்லை இருப்பதால் கலெக்டர் அலுவலக மெயின் ரோடு கரும்பாலை மெயின் ரோடு நுழைவு வாயில் முன்பாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை மதுரை நகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் ஆசிர்வாதத்திடம் சிறப்பு இணைய வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் அனுப்பபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்குமா..?..பொறுத்திருந்து பார்ப்போம்.!
You must be logged in to post a comment.