கையெடுத்து கும்பிடுறேன் வெளில வராம வீட்டிலேயே இருங்க:-பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரிய சாமி..
உருக்கமான வார்த்தைகளால் உள்ளத்தை நெகிழச் செய்யும் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி!
பட்டுக்கோட்டைக்கு எத்தனையோ காவல் ஆய்வாளர்கள் பணிபுரிந்து சென்றிருக்கின்றனர். அதில் மிகவும் வித்தியாசமானவர் பெரியசாமி
இவர் இங்கு பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை போக்குவரத்து ட்ராபிக் சட்டம்-ஒழுங்கு, குடியுரிமை திருத்த சட்டம், கொரோனா, 144 தடைஉத்தரவு இப்படியான பல்வேறு நெருக்கடியான நிலைகளிலும் கூட குறைந்த காவலர்கள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் சமாளித்து பட்டுக்கோட்டையில் அனைத்து சாதி மத மக்களிடம் நல்ல அபிமானம் கொண்டு பணிபுரிந்து வருகிறார் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில்.
தற்போது நெருக்கடியான நிலையை நாம் அனைவரும் சந்தித்து வருகிறோம். இச்சூழ்நிலையில் வைரஸ் தொற்று காரணமாக ஒரு மனித உயிர் கூட பாதிக்கப்படக்கூடாது இன்று தமிழக காவல்துறையும் அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பல இடங்களில் பொதுமக்கள் மீது தாக்குதல் தடியடி என்று தொடரும் நிலையிலும் முற்றிலும் மாறுபட்டு,
பட்டுக்கோட்டையில் மையப்பகுதியான மணிக்கூண்டு பகுதியில் தனக்கே உரிய கனிவான வகையில் கும்பிட்டு கேட்கிறேன் யாரும் வெளியில் வராதீங்க… எல்லாரும் நல்லா இருக்கணும் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க என்று பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிட்டு ஒலிபெருக்கியின் மூலமாக வேண்டுகோள் விடுக்கும் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி வித்தியாசமான ஆய்வாளர் தான்!
இப்படிப்பட்ட சில நல்ல அதிகாரிகளையும் தமிழக காவல்துறை கொண்டுள்ளது என்பது சிறப்பான விஷயம்!
You must be logged in to post a comment.