Home செய்திகள் சுய ஊரடங்கு வெறிச்சோடிய பாலக்கோடு..

சுய ஊரடங்கு வெறிச்சோடிய பாலக்கோடு..

by Askar
கொரோனா வைரஸ் எதிரொலியாக அரசு சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பேருந்துகள், கடைகள் ,வழிபாட்டு தலங்கள், அடைக்கப்பட்டிருந்தன
மற்றும் சாலைகளில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு  முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டன. போக்குவரத்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது அனைத்து போக்குவரத்துக் கழகம் வாகனங்களும் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தது, உழவர் சந்தை தக்காளி மார்க்கெட் மீன் மார்க்கெட் ஆட்டு இறைச்சி கடை உள்ளிட்டவை முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது , ரயில்கள் இயங்காததால்  ரயில் நிலையங்கள்  வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் தாமாகவே முன்வந்து  இந்த பொது  பந்த்தை கடைபிடித்தனர். அரசு மருத்துவமனை  மற்றும் மருத்துகடைகள் மட்டும்  திறந்து வைக்கப்பட்டது. அரசு மருத்துவர்கள்,காவல்துறையினர்,தீயனைப்பு துறையினர், பேரூராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். டு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!