Home செய்திகள் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: திமுக நிகழ்ச்சிகள் 31ம் தேதி வரை ஒத்திவைப்பு: பொதுக்குழு தேதி பின்னர் அறிவிக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு..

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: திமுக நிகழ்ச்சிகள் 31ம் தேதி வரை ஒத்திவைப்பு: பொதுக்குழு தேதி பின்னர் அறிவிக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு..

by Askar

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் திமுக நிகழ்ச்சிகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கடந்த 15ம் தேதி அறிக்கையின் வாயிலாக, திமுக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 29ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் எனவும் இதில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 16ம் தேதி கடிதத்தின் வாயிலாக கட்சியின் பொருளாளர் துரைமுருகன், பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விழைவதாகவும், எனவே, அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டு மார்ச் 29ம் தேதி அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வண்ணம், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில், ஏற்கனவே 29ம் தேதி அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கட்சி பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதோடு, தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற மார்ச் 31ம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!