இராமநாதபுரம், ஆக.5- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் உரிய பராமரிப்பின்றி சுற்றித்திரிந்த 46 மாடுகள் நகராட்சி பணியாளர்கள் பிடித்து நகராட்சி அலுவலகம் அருகே தனியார் இடத்தில் அடைத்து காவலாளி கண்காணிப்பில் பாதுகாத்து வந்தனர். கால்நடைகளின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 20 மாடுகள் அங்கிருந்து இன்று விடுவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர விசாரணை செய்யப்பட்டது. விடுவிக்கப்பட்ட 20 மாடுகள் நகராட்சி பணியாளர்களுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதனையடுத்து மாடுகளை பாதுகாக்க நியமிக்கப்பட்ட பணியாளர் முருகேசன் மாடுகளை விடுவித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது. விடுவிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளரிடம் தலா ரூ 5 ஆயிரம் அபராதம் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக கீழக்கரை நகராட்சி தலைவர் ஷெஹானாஸ் ஆபிதா தெரிவித்துள்ளார்.
27
You must be logged in to post a comment.