இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குதெருவில் அல்ஜதீத் வாலிபால் கிளப் சார்பில் 29 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
இராமநாதபுரம் எப்.பி டெய்லர் அணி முதலிடத்தையும், ஏ.ஆர் கன்ஸ்ட்ரெக்சன் அணி இரண்டாம் இடத்தையும், ஒப்பிலான் அணி மூன்றாமிடத்தையும், கீழக்கரை ஜே.வி.சி அணி நான்காம் இடத்தையும் வென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையை Keeggi, கீழை மீடியா, கீழை நியூஸ் மற்றும் ஹாலா உணவு பொருட்கள் ஆகிய நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை முன்னள் வடக்கு தெரு ஜமாத் தலைவர் அக்பர்கான், முன்னாள் கீழக்கரை நகர் மன்ற தலைவர் பஷீர் அகமது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான், அன்சாரி, ரகுமத்அலி, தெற்கு தெரு ஜமாத் செயலாளர் செய்யது இப்ராகீம், இன்ஜினியர் கபீர்,அனஸ்தீன், கீகீ ரசூல்தீன், கீழை நியூஸ் முகம்மது ஹாஜா சுஐபு ஆகியோர் வழங்கினர்.
மேலும் இதில் ஜே.வி.சி சேர்மன் நூகு, துணை சேர்மன் நஸ்ருதீன், தலைவர் மஹ்தூமியா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன், துணை தலைவர் மீரான், கோவன்னா,அர்சத், செயலாளர் பகத், துணை செயலாளர் ஹர்சத் அலி, பயிற்சியாளர் நாகூர்கனி, மேலாளர் ஹமீது ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.