Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -35

(கி.பி 1299-1922)

மார்ட்டின் லூதர் கிங் அன்றைய கிறிஸ்தவ உலகில் ஒரு புரட்சியாளராக உருவானார்.

போப்பால் இவரை தடுக்க முடியவில்லை. இவருக்கு பின்னால் திரண்ட இளைஞர்கள் கூட்டத்தையும் தடுக்க முடியவில்லை.

இதனால் ஐரோப்பாவில் உள்நாட்டு சண்டைகள் ஏற்பட்டது. தொடர்ந்து 30 ஆண்டுகள் சண்டை நடந்தது.

மார்ட்டின் லூதர் கிங் கல்வியை மதத்திலிருந்து பிரித்தார். ஆகவே சர்ச்சிலிருந்து கல்விக்கூடங்களை பிரித்தெடுத்தார்.

தனிக் கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் பாதிரியார்களின் கட்டுப்பாடுகள் கல்விக்கூடங்களில் இல்லாததால் கல்வி கற்பது எளிதாக இருந்தது.

மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் பைபிளுக்கு யாரும் விளக்கம் அளிக்கலாம் என்று கட்டுப்பாடுகளை உடைத்தார்.

டச்சு மொழியில் முதல் முறையாக பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.

புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் மொழி பெயர்க்கப்பட்டன.

மார்ட்டின் லூதர் கிங் பைபிளில் தனது கருத்துக்களை புகுத்தினார். பைபிளிலிருந்து பல கருத்துக்களை நீக்கினார்.

ரோமன் கத்தோலிக்க பைபிள் வேறு. மார்ட்டின் லூதர் கிங் உருவாக்கிய புரோட்டஸ்டெண்ட் பைபிள் வேறு என்ற நிலைமைகள் உருவாகி குழப்பங்கள் ஏற்பட்டன.

பைபிளின் நம்பகத்தன்மையும், புனிதத்தன்மையும் கேள்விக்குள்ளாகின.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பழமைவாதிகள் எனவும், புரோட்டஸ்டெண்ட் கிறிஸ்தவர்கள் நவீனவாதிகள், எனவும் கூறும் சூழல் ஏற்பட்டது.

கூடன்பெர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

ஏராளமான பைபிள்கள் பல மொழிகளில் அச்சடிக்கப்பட்டன. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் அதனை கொண்டுபோய் சேர்த்தனர்.

உலகம் முழுவதும் பைபிளும், கிறிஸ்தவ நூல்களும் பரவி கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சிக்கு துணை புரிந்தன.

கடற் பகுதிகள் அனைத்தும் உஸ்மானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.

மங்கோலியர்களின் படையெடுப்பில் முஸ்லீம்களின் ஏராளமான நூல்களை சுத்தமாக அழித்து விட்டனர்.

சட்ட நூல்கள் போன்றவைகள் அழிக்கப்பட்டதால் உஸ்மானியர்களின் ஆட்சியில் முஸ்லீம் அறிஞர்கள் குழு இஜ்திஹாத் (குர்ஆன் மற்றும் சுன்னா வழியில் ஆய்ந்தறிந்து) செய்து நிறைய சட்டங்களை வடிவமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

உஸ்மானியர்கள் சுன்னத்து வல் ஜமாத் கொள்கைகளையும், ஹனபி மத்ஹப் வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றினர்.

பின் வந்த பல மன்னர்கள் பலசெயல்களில் நெறி தவறினாலும், இஸ்லாமிய வாழ்க்கை நெறியை கடைபிடித்தனர்.

கி.பி 1755 ஆம் ஆண்டு பாக்தாத்தில் இருந்த வானிலை ஆய்வு மையத்தை முஸ்லீம்களே இடித்தனர்.

பின்நடக்கப்போகிற நிகழ்வுகளை முன்னாடியே கணித்து சொல்வது ஹராம் என ஒரு கருத்தை கூறினார்கள்.

அச்சு இயந்திரத்தை பன்றி தோல் பயன்படுத்தப் படுவதாக கூறப்பட்டு எப்படி அது தடுக்கப்பட்டதோ, அதுபோலவே இதுவும் நிகழ்ந்தது.

இதனால் முஸ்லீம்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!