57
ஈரான்-இஸ்ரேல் இடையே நேரடி ராணுவப் போர் மூண்டது! பதட்டத்தில் மேற்காசிய நாடுகள்.
இஸ்ரேலை குறிவைத்து பல நூறு ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் தாக்குதல்.
ஈரான் வீசிய ஏவுகணைகளை இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டான் ஆகிய நாடுகள் தாக்கி அழித்து வரும் சூழலில், பல ஏவுகணைகள் இலக்கை அடைந்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை கூட்ட இஸ்ரேல் அழைப்பு.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 ஈரான் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
You must be logged in to post a comment.