9
திண்டுக்கல் மீரான்மைதீனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய சொல்லியும் அதை மதிக்காமல் சிறைவாசி மீரானின் விடுதலையில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வரும் மத்திய சிறைத் துறை அதிகாரிகளை கண்டிக்கும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்டம் சார்பாக மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாநிலத் தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம்,மாநிலப் பொதுச்செயலாளர் மதுரை ராஜா உசேன், மாநில இளைஞரணி தலைவர் திண்டுக்கல்அல் ஆசிக், தென் மண்டல அமைப்புச் செயலாளர் முள்ளார் சையத் அலி, மற்றும் இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.
You must be logged in to post a comment.