கொரானா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி மார்ச் 24ஆம் தேதி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 144 தடை உத்தரவு மார்ச் 25 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலையிழந்து வருவாய் இன்றி அன்றாட வாழ்க்கையை நகர்த்த இயலாமல் தினக்கூலி தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதனையறிந்த தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் சிரமப்படும் தொழிலாளிகள், ஆதரவற்றோருக்கு பல்வேறு உதவிகளை தினமும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் என்எஸ்இ பவுண்டேஷன், சென்னை எய்டு இந்தியா ஆகியன சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரத்தில் 70 குடும்பங்கள் , திருப்புல்லாணி வட்டாரத்தில் 60 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வீதம் அரிசி மற்றும் மளிகை, காய்கறிகள் ஆகியன வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.