11
கீழக்கரையல் கொரோனோ வைரசால் ஏற்படும் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கீழக்கரையில் உள்ள பல்வேறு அமைப்புகள் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கீழக்கரை உஸ்வத்துல் ஹஸனா சங்கம் சார்பாக பல்வேறு சமுதாய மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பல்லாயிரகணக்கான மக்கள் பயனடையும் வகையில் நிவாரன பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் உட்பட இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி கலந்து கொண்டார். மேலும் சங்கத்தின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சார்ந்துள்ள பல் வேறு பகுதிகளில் வழங்க 500நபர்கள் பயன்பெறும் வகையில் பொருட்கள் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.