9
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையானது வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் உணவிற்க்காக பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் எஸ்.டி முருகன் அவர்களது மகன் விக்னேஷ் என்பவர் தானாக முன்வந்து உணவு தயாரித்து கீழக்கரை வி.ஏ.ஒ.அலுவலகம் எதிரில் வைத்துள்ளார் உணவு கிடைக்காமல் தவிப்பவர்கள் எடுத்துகொள்ளலாம்.
இதை இன்னும் அதிகப்படுத்த உள்ளோம் என்றார்.மேலும் இதை ஒரு விளம்பரத்திற்க்காக செய்யவில்லை என்றார்.போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்றதிற்க்கு ஒத்துகொள்ள மறுத்தார். இதை பார்த்து இன்னும் நிறையபேர் நம்முடைய பகுதியில் செய்ய முன்னுவருவார்கள் என்றதும்.போட்டோ எடுப்பதற்க்கு ஒப்பு கொண்டார்.
You must be logged in to post a comment.