10
இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தனியார் பேருந்துகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர். பரமக்குடி அருகே பார்த்திபனூர் பகுதியில் இருந்து சென்னை சென்ற தனியார் பேருந்தை சோதனையிட்டனர்.
அப்போது ரூ.2.60 கோடி மதிப்பில் 11. 5 கிலோ தங்கம் சிக்கியது. இது தொடர்பாக பேருந்தில் பயணித்த 3 பேர் பிடிபட்டனர். விசாரணையில் இலங்கையிலிருந்து நாட்டுப் படகில் மண்டபம் அருகே வேதாளை கடல் பகுதிக்கு கடத்தி வந்தது தெரிந்தது. மூன்று பேரையும் கைது செய்து சென்னை கொண்டு சென்று அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
You must be logged in to post a comment.