Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது..

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம்,  இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொது மக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடன் எதிர் வரும்  30.07.2018  அன்று மாலை 05.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. 

மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.​​  மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் வெளியிட்டுள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com