Home செய்திகள் குவைத் சிறையில் தமிழக மீனவர் 4 பேர்

குவைத் சிறையில் தமிழக மீனவர் 4 பேர்

by mohan

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி குவைத் சிறையில் வாடும் மீனவர் 4 பேரை மீட்டு தரக்கோரி அவர்களது குடும்பத்தார் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடிகாந்தி நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன், மீன்பிடி தொழிலுக்காக குவைத் நாட்டிற்குச் சென்றார்.கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது போதைப்பொருள் வைத்திருந்ததாக கார்த்திக், வினோத்குமார், ஜேசு, சந்துரு ஆகியோரை குவைத் மரைன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அந்நாட்டு சட்ட நடைமுறைகள், அந்நாட்டு மொழி தெரியாமல்.குவைத் சிறையில் வாடும் 4 பேரையும் விரைவாக மீட்டு ஒப்படைக்க வேண்டும் என கார்த்திக், வினோத்குமார், ஜேசு, சந்துரு ஆகியோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com