46 இராமநாதபுரம், ஆக.14 –
கடந்த 18.01. 2021ல் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி நடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் மெசியா இறந்தார்.
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை 16.12.2017 ல் சுட்டு கொன்ற மீனவர் பிரிட்ஜோ இறந்தார். இருவரின் குடும்பங்களுக்கு காப்பீடு தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன் காதில் பூ சுற்றி மாநில செயலர் செந்தில்வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
You must be logged in to post a comment.