Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அருப்புக்கோட்டையில் மின்கசிவால் பட்டாசு கருந்திரிக் கட்டுகள் தீப்பற்றி விபத்து. கணவன், மனைவி படுகாயம்..

அருப்புக்கோட்டையில் மின்கசிவால் பட்டாசு கருந்திரிக் கட்டுகள் தீப்பற்றி விபத்து. கணவன், மனைவி படுகாயம்..

by ஆசிரியர்

அருப்புக்கோட்டையில் மின்கசிவால் பட்டாசு கருந்திரிக் கட்டுகள் தீப்பற்றி விபத்து. கணவன், மனைவி படுகாயம் – வீடு முற்றிலும் சேதம் – தீ விபத்து குறித்து நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் மகன் கந்த வேலு (56). இவரது மனைவி மாரியம்மாள் (42). இத்தம்பதியர் தமது வீட்டிலேயே கூலிக்கு, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பட்டாசுத் கருந்திரிகளை தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தயாரித்த கருத்துக்களை தொழிற்சாலைகளுக்குத் அனுப்ப தயாராக கட்டுகளாகக் கட்டி சிறு மூட்டைகளாக வீட்டின் உள் அறையில் பாதுகாப்பாக வைத்துள்னர்.

இந்நிலையில் இன்று மின் கசிவு காரணமாக பட்டாசுத் திரிகளில் தீப்பற்றி கடுமையான தீவிபத்து ஏற்பட்டது. இதில் கணவன், மனைவி இருவரும் தீயில் சிக்கிப் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் பிறவீடுகளுக்குத் தீ பரவாமல் போராடி தீயை அணைத்தனர். படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீவிபத்தில் வீடு முழுவதும் சேதமடைந்தது விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!