11
வருடம்தோறும் ஜூன் ஐந்தாம் தேதி உலக சுற்று சூழல் தினமாக கடைபிடிக்கபடுகிறது. இதையொட்டி இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு வளாகங்களை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்வை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா ஆயுதப்படையில் துவக்கி வைத்து மரங்கள் நட்டார்கள்.
மேலும் சுற்றுச் சூழலை காக்க காவலர்கள் மரம் நட்டு பசுமையாக்க வேண்டுமெனவும், பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டார்கள். இப்ணியில் மாவட்டம் முழுவதும் சுமார் 1200 காவலர்கள் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.