தேனி மக்களவைத் தொகுதி அதிமுக சார்பில் தமிழக துனை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவிந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நகரப்பகுதியில் 1 முதல் 24 வார்டுகளிலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பிரச்சாரத்தில் 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சியை நான் 5 ஆண்டுகளில் செய்து உசிலம்பட்டியை வளர்ச்சியடைய செய்வேன் என அதிமுக தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவிந்திரநாத்குமார் சவலாக பேசினார். மேலும் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, போன்ற அனைத்து வசதிகளையும் கண்டிப்பாக செய்து தருவேன் என பேசினார்.
இவருடன் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ பாண்டியம்மாள், முத்துராமலிங்கம், தவசி, மற்றும் நகர செயலாளர் பூமாராஜா, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.