Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வேலூரில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அமமுக மற்றும் அதிமுக…

வேலூரில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அமமுக மற்றும் அதிமுக…

by ஆசிரியர்

வேலூர் பாராளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏசி.சண்முகம் போட்டியிடுகின்றார். நேற்று (09/4/2019)  இரவுகே வி.குப்பம் தொகுதியில் உள்ள சேத்துவாண்டை ‘அம்மாணங்குப்பம் ‘பசுமாத்தூர், நாகல் கொசவன் புதூர் டி.ஆர்.குப்பம் மற்றும் சுற்று பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் படி தொகுதி மக்களை சந்தித்து கேட்டு கொண்டனர்.

இப்பிரச்சாரத்தில் ஒன்றிய மகளிர் அணி அதிமுக செயலாளர் ராஜ பூசனம் பசுமாத்தூர் கூட்டுறவு வங்கி இயக்குநர் முருகேசன், ஊராட்சி செயலாளர் முகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் வேலூர் மாவட்டம் அரக்கோணம் பாராளுமன்ற அமமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்தீபன் பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிடுகின்றார். காட்பாடி சட்டமன்ற தொகுதியான திருவலம் வில்வ நாதீஸ்வரர் கோவிலில் பூஜை செய்து பிரச்சாரம் துவக்கினார். தொகுதியில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கு சொன்று வாக்கு சேகரித்தார். பட்டாசு வெடித்து மேளதாள வரவேற்பு அமமுக வேட்பாளருக்கு கொடுக்கப்பட்டது.

வேலூர் மத்திய மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஏ.எஸ்.ராஜா, அவைத் தலைவர் எஸ்.ராஜா, ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ் வேலூர் மத்திய மாவட்ட அமமுக மகளிர் அணி செயலாளர் ஆர்.விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!