11
தேர்தல் வந்தாலே வினோதங்களும், அதிசயங்களும் தினம் தினம் வாக்காளர்களை கவர தொடங்கி விடும். பாராளுமன்ற தேர்தல் கூத்துக்கள் நிறைவடைந்த நிலையில் இடைத்தேர்தல் என்ற சிறப்பு திருவிழாவின் ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. மதுரையில் குடிகாரர்களுக்கு என சங்கம் வைத்திருக்கும் செல்லபாண்டி என்பவரும் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
அது பற்றி கூறியுள்ளதாவது, “திருப்பரங்குன்றம் வீதிகளிலே காலிபாட்டில்களை சேகரித்து எடைக்கு போட்டு டெபாசிட்டுடன் மனுதாக்கல் செய்கிறேன்” என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பாக செல்லப்பாண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயக உரிமை என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாம் பார்க்க காத்திருக்கிறோமோ தெரியவில்லை.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.