இந்த பாதுகாப்பு வகுப்பில் விநியோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விநியோகத்தில் பணி புரியும் போது பாதுகாப்புக்காக உபயோகப்படுத்த வேண்டிய நில இணை பம்ப், (EARTH ROD) பாக்கி, (BELTROPE), (GLOVES) ஆகிய பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடுகள் மற்றும் தன்மைகள் பற்றி ஒலி ஒளி காட்சியுடன் திருநெல்வேலி மண்டல பாதுகாப்பு அதிகாரி உதவி செயற்பொறியாளர் செந்தில் ஆறுமுகம் செயல்முறையில் விளக்கி கூறினார். மேலும் வருகிற 01.12.2023 முதல் விநியோகத்தில் பணி புரியும் போது பாதுகாப்பு செயலி (TNEB SAFTY APP) மூலம் உறுதி செய்யப்பட்ட பின்பு பணிகள் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு செயலியின் எளிய வழிகாட்டுதல் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது பணியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு வகுப்பில் புளியங்குடி உபகோட்ட பிரிவில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர், பிரிவு மின் பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு பாதுகாப்புடன் பணிபுரிவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த பாதுகாப்பு வகுப்பினை திருநெல்வேலி தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய உதவி மின் பொறியாளர் முருகன், சிறப்பு நிலை முகவர் இராமசுப்பு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.