12
மதுரை சங்கமம் அரிமா சங்கத்தின் பொருளாளர் உயிர்த்துளி ரமேஷின் தாயார் அ.புஷ்பவதி (வயது 67) உடல் நலக்குறைவால் 30-04-2019 அன்று காலை 10.45 AM மணிக்கு இயற்கை எய்தினார்.
அதை அடுத்து அவரது தாயாரின் விருப்பத்திற்கிணங்க உடலை மதுரை மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்வி நோக்கத்திற்காக ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தார்கள் உடலை தானமாக அளிக்க முன்வந்தனர். வீட்டில் செய்யக்கூடிய சடங்குகள் செய்து மாலை 6 மணிக்கு குடும்பத்தினர்கள், மதுரை சங்கமம் அரிமா சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் குருதிக்கொடையாளர்கள் பலரும் கலந்து கொண்டு கல்லூரிக்கு உடலை தானமாக வழங்கும் சம்பிரதாயங்களை செய்து முடித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.