11
இராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை ஊராட்சியில் கொரானா தொற்று பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி திமுக., பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது.
சாலை ஓர காய்கறி வியாபாரிகளுக்கு முகக்கவசம், தூய்மை பணியாளர்களுக்கு கை உறை, முகக்கவசம் வேலை இன்மையால் வருமானமின்றி சிரமப்படும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன், சூரங்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வநாதன், ராமநாதபுரம் நகர் திமுக செயலர் கார்மேகம், வருவாய் துறை அலுவலர் (ஓய்வு) குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, கமுதி போஸ், திருப்புல்லாணி நாகசாமி உள்பட பலர் உடன் சென்றனர்.
You must be logged in to post a comment.