இராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பவானி ராஜேந்திரன், பரமக்குடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திசை வீரன், முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.முருகவேல் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் கே.கார்மேகம் வரவேற்றார். திமுக., அரசு கொண்டு வந்த பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரிக்க வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், போதியளவு துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும், இருள் சூழ்ந்த இடங்களில் எரியாத மின் விளக்குகளை மீண்டும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெறும் அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலவச பொது கழிப்பறைகளுக்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், நிலவும் சீர்கேடுகளையவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் ஓராண்டாக காலியாகவுள்ள ஆணையர் பணியிடம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலாடி ஒன்றிய செயலர் ராஜசேகரன், திருவாடானை ஒன்றிய செயலர் சரவணன், நயினார் கேரவில் ஒன்றிய செயலாளர் சத்தி, போகலூர் ஒன்றிய செயலாளர் கதிரவன், ராமேஸ்வரம் நகர் செயலாளர் கே.இ.நாசர் கான், இலக்கிய அணி முன்னாள் நிர்வாகி கிருபானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரகு, தொமுச செயல் தலைவர் மலைக்கண்ணன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள், பெருநாழி போஸ், ராமர், நகராட்சி முன்னாள் துணை தலைவர் ஜெகநாதன், நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் டிஆர்எஸ் (எ) அய்யனார் , போஸ், பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் பிரவீன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.