13
கீழக்கரை நகராட்சி மற்றும் எக்குடி ஊராட்சி மற்றும் இன்ன பல பகுதிகளில் 11 மணி அளவில் இருந்து தி.மு.க.சார்பாக நியாய விலைக் கடைகளில் சக்கரை விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கீழக்கரை நகர் திமுக உறுப்பினர்கள், திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைமையில் கலந்து கொண்டு பலத்த கோசம் எழுப்பினர். அதேபோல் எக்ககுடி ஊராட்சியில் தி.மு.க செயலாளர் அஸ்கர் அலி தலமை தாங்கினார். இப்போராட்டத்தில் எக்குடியில் பொதுமக்கள் 300 பேருக்கு மேல் பங்கேற்றனர். எக்குடியில் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் நடைபெறும் இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.