இராமநாதபுரம், செப்.26- இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் நலம், கதர் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையேற்றனர். மாவட்ட அமைப்பாளர் கே.சம்பத்ராஜா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் செ. முருகேசன் எம்எல்ஏ, ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.டி.பிரபாகரன், ராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளர் ஆர்.கே.கார்மேகம், தெற்கு நகர் செயலாளர் டி.ஆர்.பிரவின் தங்கம், போகலூர் ஒன்றிய செயலர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ். அஹமது தம்பி முன்னிலை வகித்தனர்.
இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் ஜி.பி. ராஜா, ஏ. என். இன்பா ரகு ஆகியோர் பேசினர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, டிச.17 மாநில இளைஞர் அணி மாநாடு. பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகம் அமைத்தல், 4 தொகுதிகளில் இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை, மாரத்தான் போட்டி, பேச்சுப்போட்டி நடத்தல் ஆகிய தீர்மானங்களை இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எஸ்.ரமேஷ் கண்ணா, சி.கே.குமரகுரு, ஆர்.எஸ். சத்தியேந்திரன், ஆர்.கே. கோபிநாத், எஸ்.தௌபீக் ரஹ்மான் ஆகியோர் முன்மொழிந்தனர். இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.ரமேஸ் கண்ணா நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.