Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்!

இராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்!

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட  திமுக சார்பில் பரமக்குடியில் செயல் வீரர்கள்   கூட்டம்   ராஜா மஹாலில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் தீனதயாளன் தலைமை ஏற்றார். பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ திசை வீரன் வரவேற்புரை ஆற்றினார்.

அக்கூட்டத்தில் மாவட்ட திமுக பொருப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் பேசியதாவது,  “என்னை மாவட்ட திமுக பொறுப்பாளராக தளபதி அவர்கள் அறிவித்த உடனேயே  அவரின் அறிவுறுத்தலின்படி  வீடு தேடி சென்று அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்தேன்.  கோஷ்டி பூசல் இல்லாத அரசியல் செய்ய தளபதி அறிவுறுத்தினார். பூத் கமிட்டி அமைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.    ஒவ்வொரு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி  பூத் கமிட்டி அமைத்து நிர்வாகிகளை சுறுசுறுப்பாக கழக பணியாற்ற  அறிவுறுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத  வெற்றி பெற்று நமது செயல் தலைவர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். சாதாரண தொண்டனான எனக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.     அதனை சிறப்பாக செய்து முடிக்க காத்திருக்கிறேன்” என பேசினார்.

மேலும் கூட்டத்தில் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் முன்னாள் எம்எல்ஏ முருகவேல் பெருநாழி போஸ் முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்ல சேதுபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, நயினார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் சக்தி மண்டபம், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் கே.ஜெ.பிரவீன், இராமநாதபுரம் டி.ஆர்.எஸ்.அய்யனார்,  ஆர்.எஸ்.மடை ஊராட்சி டி.கே.குமார் உள்பட  ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!