13
முன்னாள் தமிழக முதல்வர், திமுக கட்சியின் ஐம்பது ஆண்டு கால தலைவருமாகிய தமிழின காவலருமான கலைஞரின் மறைவையொட்டி தமிழகமே சோக கடலில் அவரின் மறைவுக்காக கட்சி பாகுபாடின்றி, ஜாதி மத வேறுபாடின்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரையில் நகர்செயலாளர் பஷீர் அகமது தலைமையில் கீழக்கரை முக்கிய வணிக பகுதியில் அவரது திருவுருவபடத்திற்க்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்ந நிகழ்வில் நகர் துணை செயலாளர் கென்னடி, முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன், SKVசுஐபு, ஜமால் பாரூக்,சாகுல் ஹமீது, ஆறுமுகம் மற்றும் பல தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
பட உதவி:- Sunrise Digital, Kilakkarai
You must be logged in to post a comment.