இராமநாதபுரம், நவ.,6 – இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபை ஐயப்பா சேவை நிலையம் – அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகை புத்தாடை வழங்கும் சேவை விழா நடந்தது. ராமையா சுவாமி தலைமை வகித்தார். கண்ணபிரான் வரவேற்றார். அறக்கட்டளையின் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து குருநாதர் ஶ்ரீ ஆர்.எஸ்.மோகன், சேவைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்.
ராமநாதபுரம் ஶ்ரீ ராமலிங்கா அன்பு இல்ல நிர்வாகி ஏற்புரை ஆற்றினார். 10, பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு ராஜசேகரன் நினைவு கல்விப் பரிசு, பாராட்டு சான்றிதழ் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு புத்தாடை வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.