8
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இராமநாதபுரத்தில் கோ-ஆப் டெக்ஸ் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். கடந்தாண்டு (2017-18) விற்பனை இலக்கு ரூ.70.91 லட்சங்களை கடந்து நடப்பாண்டு (2018 – 19) நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.85 லட்சங்களை எட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கைத்தறி சேலைகள் மற்றும் துணி ரகங்களை வாங்கி நடுத்தர வகுப்பு நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என ஆட்சியர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இத்துவக்க விழாவின் போது மேலாளர் (அரசுத் திட்டம்) பழனிச்சாமி, மேலாளர் (உற்பத்தி மற்றும் வடிவமைப்பு செல்வராஜ், மேலாளர் (ஓய்வு) மணிவண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா துரை உள்பட பலர் பங்கேற்றனர். மேலாளர் (பொறுப்பு) பாண்டியம்மாள் மற்றும் கோ ஆப் டெக்ஸ் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.