39
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த தேவாங்கு..
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நீதிமன்ற வளாக குடியிருப்பு பகுதியில் தேவாங்கு ஒன்று மரத்தில் இருந்தது.இதை பார்த்த நீதிமன்ற ஊழியர்கள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள மரத்தில் இருந்த தேவாங்கை பிடித்து கூண்டில் அடைத்தனர்.பின்னர் தேவாங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
You must be logged in to post a comment.