எரியாத ஹைமாஸ் விளக்கு: கும்மிருட்டில் சித்தையன் கோட்டை அரசு மருத்துவமனை; அதிகளவில் ஊர்ந்து செல்லும் விச ஜந்துக்கள்:உயிர் பயத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்!
ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை அரசு மருத்துவனை வளாகத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2009 -ம் வருடம் ரூபாய் 3,00,000/ மதிப்பீட்டில் ஹைமாஸ் விளக்கு அமைத்து அரசு மருத்துமனை வளாகம் முழுவதும் ஒளியூட்டப்பட்டு பிரகாசமாக எரிந்து வந்த நிலையில் கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஹைமாஸ் விளக்கு பழுதடைந்து எரியாத நிலையில் உள்ளதால். அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. மருத்துவமனை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் காட்டுப் பகுதியாக உள்ளதாலும் விஷ ஜந்துக்கள் அதிகமாக ஊர்ந்து திரிவதாலும் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளும் அவர்களுக்கு உதவிக்கு வருபவர்களும் மிகுந்த கவணமுடன் வந்து செல்லும் நிலை உள்ளது. ஆகவே, துறைசார்ந்த நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பழுதடைந்து எரியாத நிலையில் உள்ள ஹைமாஸ் விளக்கை சரிசெய்து மீண்டும் அப்பகுதியில் ஒளியூட்டிதந்து உதவுமாறு பகுதிவாழ் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.