13
கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் பாதிக்கப்பட்டு வரும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட வில்லாபுரத்தில் உள்ள ராஜன் மெட்ரிக் பள்ளியில் ரோட்டரி கிளப் மதுரை மேற்கு சார்பாக ரவி பார்த்தசாரதி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கபசுர குடிநீர் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பொருட்களை பெற்று சென்றனர்.இந்நிகழ்ச்சியில் பழனியப்பன் மருத்துவர் சேதுராமன் உள்ளிட்ட ரோட்டரி கிளப் மதுரை மேற்கு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.