12
அமைப்புசார நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் அரசு நிவாரணம் வேண்டி ஆர்ப்பாட்டம்!
அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் , 6 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரியத்தில் குளறுபடிகள் இல்லாமல் விரைவாக பணிகளை செய்து தரவேண்டும், தகுதி உள்ள பெரும்பாலான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 26-5-20 அன்று திண்டுக்கல் நலவாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தொழிலாளர் இணை ஆணையர், நலவாரியம் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது.
You must be logged in to post a comment.