கோவிட் 19 நோய்தொற்று காரணமாக ஆட்டோக்கள் ஓட்ட முடியாமல் வருமானம் இன்றி தவிக்கும் ஓட்டுனர்கள்!
கோவிட் 19 நோய்தொற்று காரணமாக மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு 144 தடையுத்தரவு பிறப்பித்து தற்போதுவரை அமுலில் உள்ளது.
இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் ஏறத்தாழ “55” நாட்களாக பிழைப்பிற்க்கு வழியின்றி. வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.
வீட்டு வாடகை கட்டமுடியாமல் நெருக்கடியான நிலையில் சிக்கி தவிக்கும் நிலையில் மேற்கொண்டு EMI கேட்டு நெருக்கடி வராக்கடன் கேட்டு நெருக்கடி குழுக்கடன்கள் – தினசரி கடன்கள் சீட்டு பணம் – கந்துவட்டி தொல்லைகள் இன்னும் எத்தனையோ இடர்கள் இவற்றை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும்
தமிழக அரசு தங்களை கண்டுகொள்ளவில்லை எனவும் சிலருக்கு மட்டுமே அரசு அளித்த நிவாரணம் 1000 ரூபாய் கிடைத்தபோதிலும்
அதுவும் தங்களுக்கு போதுமானதாக இல்லை எனவும்,
அத்தியாவசிய தேவைக்காக சிலர் வெளியே சென்றால் ஆட்டோக்களை பறிமுதல் செய்து வருவதாகவும்
ஆட்டோ ஓட்டுனர் யாரும் வசதி படைத்தவர்கள் இல்லை அன்றாடம் காய்ச்சிகளாக வாழ்ந்து வருவதாவும்
மான்புமிகு முதல்வர் அவர்கள்,
தங்கள் மீது இரக்கம் கொண்டு ஆட்டோக்களை இயக்க அனுமதி தந்து உதவிடவேண்டி ஆத்தூர் தாலுகா சின்னாளபட்டி பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.