14
ஆத்தூர் தாலுகா செம்பட்டி அருகே பாதுகாப்புடன் இயங்கி வரும் மதுபான விற்பனை கூடம்!
கொரொனா நோய்தொற்று காரணமாக கடந்த சுமார் 44 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த மதுபான கடைகளை 07/05/2020 இன்றுமுதல் பாதுகாப்பு, சமூக இடைவெளி போன்ற ஆலோசனையுடன் திறப்பதற்கான அறிவுப்பை தமிழ அரசு வெளியிட்டது. அதன்பேரில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில் ஆத்தூர் தாலுகா செம்பட்டி கோழிப்பண்ணை அருகே உள்ள மதுக்கடையில் அரசு உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினரின் கூடுதல் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திண்டுக்கல், பக்ருதீன்
You must be logged in to post a comment.