Home செய்திகள் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தைமுன்னிட்டு மாபெரும் வளைகாப்பு திருவிழா மற்றும் அன்னதானநிகழ்வு

கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தைமுன்னிட்டு மாபெரும் வளைகாப்பு திருவிழா மற்றும் அன்னதானநிகழ்வு

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.வாடிப்பட்டி அ.பிரிவில் அமைந் துள்ள இராஜகாளியம்மன் கோவிலில் வீட்டிருக்கும் ராஜநாகம்மன் சுமார் 108 ஆண்டுகளுக்குமேல் அருள்பாலித்துவருவதாகவும் அப்பகுதியில் ராஜகாளியம்மன் மிகவும் பிரசித்து விழங்குவதாகவும்”வேண்டுவோருக்கு வேண்டுவென அனைத்தையும் நிரைவேற்றிக் கொடுப்பதாகவும் அப்பகுதியைசுற்றி உள்ள பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. அதனடிப்படையில் இன்று நாகேஸ்வரி,மேனகா,நாகபரமேஸ்வரி ஆகிய மூன்றுபேறும் இக்கோவிலில் வேண்டிக் கொண்டதின்படி அவர்கள் மூவரும் கருவுற்றதால் அவர்களுக்கு இக்கோவிலிலே வளைகாப்புநிகழ்வு நடத்தப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்வில் ,மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமி கலந்துகொண்டார். மேலும், அதிமுக கழக அமைப்பு செயலாளர் கண்ணன், மற்றும் கட்சிநிர்வாகிகளும்,கழகத் தொண்டர்களும் கலந்து கொண்டு ராஜநாக அம்மனின் அருள்பெற்றுச்சென்றனர். மேலும், கோவில் தலைமை நிர்வாகிகள் ஆனந்தன் பூசாரி”சக்தி அம்மா ,ராமுத்தாய் , முனியாண்டி_பஞ்சு முன்னிலையில் வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதன்பின்பு அண்ணதான நிகழ்ச்சியும்”பக்தர்கள் வேண்டுதல் நிகழ்வும் நடைபெற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!