7
திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (21) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமியின் தாயார் திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment.