16
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிறு நாயக்கன் பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி வயது 50. இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு அமைக்கப்பட்டுள்ள தச்சு வேலை செய்வதற்கான தச்சு மெஷினில் வேலை செய்துள்ளார்.. அப்போது எதிர்பாராதவிதமாக மெஷினில் கை மாட்டிக் கொண்டு பலத்த காயமடைந்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி திண்டுக்கல்லில் சேர்க்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் படி விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
You must be logged in to post a comment.